தமிழகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு Post Office வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
India Post இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். இது பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு கிளைகளில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் வரவேற்பு:
இந்திய அஞ்சல் துறையில் இருந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவராமல் இருந்த நிலையில் பலர் வேலை இன்றி தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ்நாடு கோயம்புத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள கார் டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் – கார் ஓட்டுநர் (Staff Car Driver)
காலியாக உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை -17 பணியிடங்கள்.
மாத சம்பளம்: ரூ.18,000 – 62,000
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 2022 – மாணவர் சேர்க்கை உயர்வு!
காலியிட விவரம்: கோயம்புத்தூர் – 11, ஈரோடு -2, நீலகிரி -1, சேலம் மேற்கு – 2, திருப்பூர் – 1
விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அதனை தொடர்ந்து கட்டாயமாக கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது தகுதி: 56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உங்கள் சுயவிவர குறிப்பு அடங்கிய விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து The Manager, Mail Motor Service, Good Shed Road, Coimbatore – 641 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2022.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தை சென்று பார்க்கலாம்.