10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.69,100 வரை ஊதியம்!
இந்திய அஞ்சல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
இந்தியாவில் தற்போது மத்திய, மாநில அரசுகள் காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது மத்திய அஞ்சல்துறையும் தனது துறையின் கீழ் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வின் விடைக்குறிப்பு 2022 – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் என்ன?
அதில் போஸ்ட்மேன் பணியில் 59,099 பேரும், வெயில் கார்ட் பணியில் 1445 பேர் என மொத்தம் 60,544 பேர் நியமிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இவர்களின் வயது 17 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சட்ட விதிகளின்படி SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் ஆகியோர்களுக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேற்கண்ட தகுதியுடையவர்கள் ஆன்லைன் வாயிலாக டிசம்பர் 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பதிவுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் மேலும் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 21,700 முதல் 69,100 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.