Post Office ஆயுள் காப்பீட்டு திட்டம் – தினமும் 95 ரூபாய் செலுத்தினால் ரூ.14 லட்சம் வரை ரிட்டன்!
அஞ்சலகத்தில் புதிய திட்டங்களுள் ஒன்றாக சுமங்கல் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காப்பீடு திட்டத்த்தில் நீங்கள் 14 லட்சம் வரை திரும்ப பெறலாம். கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தை பற்றி இப்பதிவில் காண்போம்.
காப்பீட்டுத் திட்டம்:
நவீன காலகட்டத்தில் விற்கும் விலைவாசிக்கு மத்தியில் சேமிப்பு என்பது மாதாந்திர சம்பளம் பெறும் நபர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதிக அளவு தொகையை முதலீடு செய்ய முடிவதில்லை என்றாலும் குறிப்பிட்ட தொகையாவது சேமிக்க வேண்டும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறுகிய தொகையில் சேமிப்பை தொடங்க வாய்ப்பளித்து வருகின்றனர். இவைகளை தொடர்ந்து அஞ்சல் நிலையங்கள் அதிக வட்டி தரக்கூடிய வகையில் சேமிப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கிராம சுரக்ஷா யோஜனா திட்டம், MIS சேமிப்பு திட்டங்கள் போன்ற திட்டங்கள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு திட்டம் – 2022 மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
சேமிப்பு, முதலீடு ஆகிய திட்டங்களை தொடர்ந்து தற்போது காப்பீடு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அந்த திட்டம் இது தான் அஞ்சலகத்தின் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம். இதில் 19 வயதுள்ளவர்கள் முதல் இத்திட்டத்தில் சேரலாம். 2 வகையான திட்டம் உள்ளது அதனால் பாலிசியை பொறுத்து அதிகபட்ச வயது மாறுபடுகிறது. 15 ஆண்டு திட்டத்திற்கு வயது வரம்பு 45 ஆகும். 20 வருட திட்டங்களுக்கு வயது வரம்பு 40 ஆகும். இந்த காப்பீடு திட்டத்தில் திட்டத்தில் உங்கள் தொகையை 40% போனஸாகவும், 20% திட்டம் முதிர்ச்சி அடையும் போது பெறலாம்.
தமிழகத்தில் நாளை (நவ.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
20 ஆண்டு பாலிசி திட்டத்தில் 7 லட்ச காப்பீடு தொகையில் 25 வயதுடைய ஒரு நபர் சேரும் போது மாதம் ரூ.2853 செலுத்த வேண்டும். அப்படியென்றால் ஒருநாளுக்கு 95 ரூபாய் நீங்கள் சேமிக்க வேண்டும். இதில் உங்கள் தேவைக்கேற்ப காலாண்டு தொகையாக 8449 ரூபாய் செலுத்த வேண்டும். அரையாண்டு தொகையாக 16715 ரூபாயும், ஆண்டு பிரீமியமாக 32725 ரூபாயும் செலுத்த வேண்டும். இதன் மூலம் பாலிசிதாரர் 20 ஆண்டு முடிவில் 14 லட்சம் ரூபாயை காப்பீடு தொகையை பெறலாம். காப்பீட்டாளருக்கு எதிர்பாராத மரணம் ஏற்பட்டால் இத்தகைய கொடுப்பனவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. சட்டப்பூர்வ வாரிசுக்கான நியமனதாரர்கள் முழு பணம் வழங்கப்படும்.