Post Office ல் சிறப்பான 3 திட்டங்கள் அறிமுகம் – முழு விவரம் இதோ!
இந்திய தபால் துறையின் கீழ் தற்போது சிறப்பான 3 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு நல திட்டத்திலும் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரி சலுகையும், ஆண்டுக்கு 7.6% வரைக்கும் வருமானம் கிடைக்கும் படியான திட்டம் அறிமுகமாகியுள்ளது.
Post Office திட்டங்கள்
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியதில் இருந்து டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய தபால் துறையின் கீழ் சிறப்பான 3 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, எஸ்சிஎஸ்எஸ் எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 55 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்கள் மற்றும் வயதான ராணுவ ஊழியர்கள் என அனைவரும் சேர்ந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், இந்த திட்டத்தில் ரூ.15 லட்சம் வரைக்கும் டெபாசிட் செய்தால் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச்சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், மூத்த குடிமக்களுக்கு 7.4% வரைக்கும் வருமானம் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிபிஎஃப் என்னும் திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.500 டெபாசிட் செய்தாலே ரூ.1.5 லட்சம் வரைக்கும் பங்களிப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலீட்டாளர்களுக்கு வரி சலுகையும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக மூத்த குடிமக்களுக்கு 7.4% வரைக்கும் வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
விரைவில் ஆதார் அட்டை செல்லாது? மத்திய அரசின் முக்கிய விளக்கம்!
மேலும், பிபிஎஃப் திட்டத்தில் சேர்ந்து 5 வருடங்களுக்கு பிறகு தான் பணத்தை பெற முடியும் எனவும், அதற்கு முன்பாகவே எக்காரணம் கொண்டும் பணம் கொடுக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, எஸ்எஸ்ஏ எனப்படும் பெண் குழந்தையின் எதிர்கால நலனுக்காக சேமிக்கப்படும் இந்த சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட்ஸ் திட்டத்தில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெயரிலேயே கணக்கு துவங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்தபட்சமாக இந்த திட்டத்தில் ரூ.250 முதல் ரூ.1,50,000 வரைக்கும் கூட டெபாசிட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், இந்த திட்டத்தில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரி சலுகையும், ஆண்டுக்கு 7.6% வரைக்கும் வருமானம் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.