Post Office சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அப்டேட் – இதை செய்தால் மட்டுமே வட்டி கிடைக்கும்!

0
Post Office சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அப்டேட் - இதை செய்தால் மட்டுமே வட்டி கிடைக்கும்!
Post Office சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அப்டேட் - இதை செய்தால் மட்டுமே வட்டி கிடைக்கும்!
Post Office சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அப்டேட் – இதை செய்தால் மட்டுமே வட்டி கிடைக்கும்!

ஏப்ரல் 1 முதல், அஞ்சலக கணக்குகளிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. அஞ்சலகத்தின் மாதாந்திர வருமான திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அஞ்சலகத்தில் டைம் டெபாசிட் திட்டங்களில் கடந்த ஏப்ரல் 1 முதல் வாடிக்கையாளர்கள் பெறும் வட்டி நேரடியாக கணக்கிற்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வட்டி விகிதமானது பயனர்களின் அஞ்சல சேமிப்பு கணக்கு அல்லது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கிய அப்டேட் தகவல்:

சமீப காலமாக வங்கி சேமிப்பு கணக்குகளைக் காட்டிலும் பொதுமக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். போஸ்ட் ஆபீஸில் செயல்பாட்டில் இருக்கும் சிறுசேமிப்பு திட்டங்கள் பல, முதிர்வுத் தொகையில் லாபத்தை வாரி வழங்குகிறது. முதலீடு திட்டங்களும் வட்டியில் பொதுமக்களை கவர்கிறது. இந்திய தபால் துறை மாதாந்திர வருமானத் திட்டம் மட்டுமல்லாமல் பல சேமிப்புத் திட்டங்களை கொண்டுள்ளது. அவை, தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (போசோ), 5 ஆண்டு தபால் அலுவலகம் தொடர்ச்சியான வைப்பு கணக்கு (ஆர்.டி), தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு (TD), தபால் அலுவலக மாத வருமான திட்ட கணக்கு (எம்ஐஎஸ்), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) உங்கள் வசதிக்கேற்ப திட்டத்தை தேர்ந்தெடுத்து சேமிப்புக் கணக்கை தொடங்கி சேமிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!

இந்த கணக்குடன் வங்கி சேமிப்பு கணக்கு அல்லது தபால் சேமிப்பு கணக்கை இணைக்க வேண்டும் என என்று அஞ்சல் துறை வலியுறுத்தியது. இந்த புதிய மாற்றம் 1 ஏப்ரல் 2022 முதல் அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் சிறு சேமிப்பு திட்டங்களான தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மற்றும் டெர்ம் டெபாசிட் ஆகியவற்றின் வட்டி ரொக்கமாக வாடிக்கையாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் வட்டி பணம் கிடைக்க வாடிக்கையாளர்கள் வங்கி சேமிப்பு கணக்கு அல்லது தபால் சேமிப்பு கணக்கை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி இணைக்க முடியாவிட்டால், மாதந்தோறும் வருமானத் திட்டம் மற்றும் டெர்ம் டெபாசிட் கணக்குகள், நிலுவையில் உள்ள வட்டியை அஞ்சலக சேமிப்புக் கணக்கு அல்லது காசோலை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

1. வங்கி சேமிப்புக் கணக்கை தபால் அலுவலக நேர வைப்புத்தொகையுடன் இணைக்க, டெபாசிட் செய்பவர் ஒரு ECS படிவத்தை, ரத்து செய்யப்பட்ட காசோலையுடன் அல்லது வங்கிக் கணக்கு பாஸ்புக்கின் முதல் பக்கத்தின் நகல் மற்றும் எம்ஐஎஸ்/எஸ்சிஎஸ்எஸ்/டிடி கணக்கு பாஸ்புக் ஆகியவற்றின் மூலம் சரிபார்க்க வேண்டும்

2. கணக்கு வைத்திருப்பவர் தனது போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்குடன் தனது MIS/SCSS/TD கணக்குகளை இணைப்பதற்கான SB-83 படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

3. அத்தகைய ஒப்புதலுக்கான எஸ்சிஎஸ்எஸ்/டிடி கணக்குப் புத்தகம் மற்றும் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் நோக்கத்திற்காக அஞ்சல் அலுவலகத்திற்கு அவரது அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு பாஸ்புக்கை எடுத்துச் செல்ல வேண்டும். விவரங்கள் சரிபார்க்கப்பட்டு கணக்கு இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!