Post Office இல் குழந்தைகளுக்காக சேமிக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு – அருமையான திட்டம்!
இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு Post Office MIS எனப்படும் ஒரு சேமிப்பு திட்டம் மூலம் அதிக வட்டி கிடைக்கிறது.
MIS சேமிப்பு திட்டம்:
தற்போது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமக்கள் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து வருவாயை பெற பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கினர். அதில் குறிப்பாக இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடுகளை செலுத்த தொடங்கினர். அதனை தொடர்ந்து அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதையடுத்து தற்போது Post Office Monthly Income Scheme என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு – தலைவர்கள் இரங்கல்!
இந்த திட்டத்தில் 10 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் கூட கணக்கு துவங்க முடியும். இத்திட்டத்தின் மூலம் ஒரு முறை முதலீடு செய்தால் மாத வருவாய் பெறலாம். இதன் மூலம் தங்கள் குழந்தைகளின் கல்விக்கட்டண தொகையை செலுத்தி விடலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி 6.6% ஆகும். இந்த சேமிப்பு திட்டத்திற்கான மெச்சூரிட்டி காலங்கள் 5 ஆண்டுகள் ஆகும். உதாரணமாக ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.1100 வட்டித்தொகை கிடைக்கும்.
பாரதியுடன் பைக் ரெய்டு செல்லும் லட்சுமி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த ட்விஸ்டு!
அத்துடன் 5 ஆண்டுகள் முடிவில் ரூ.66 ஆயிரம் வட்டித்தொகை கிடைக்கும். தற்போது ரூ.3.50 லட்சம் முதலீடாக செலுத்தினால் ஒவ்வொரு மாதமும் ரூ.1925 வட்டித்தொகை கிடைக்கும். இந்த தொகை குழந்தைகளின் எதிர்கால கல்வி செலவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதையடுத்து இத்திட்டத்தில் ரூ.4.50 லட்சம் முதலீடாக செலுத்தினால் ரூ.2475 வட்டித்தொகை கிடைக்கிறது. இத்திட்டம் மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் Post Office MIS திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.