Post Office ரூ.5000 முதல் முதலீட்டில் அதிக வருமானம் – சூப்பரான 2 திட்டங்கள்! முழு விபரம் இதோ!

0
Post Office ரூ.5000 முதல் முதலீட்டில் அதிக வருமானம் - சூப்பரான 2 திட்டங்கள்! முழு விபரம் இதோ!
Post Office ரூ.5000 முதல் முதலீட்டில் அதிக வருமானம் - சூப்பரான 2 திட்டங்கள்! முழு விபரம் இதோ!
Post Office ரூ.5000 முதல் முதலீட்டில் அதிக வருமானம் – சூப்பரான 2 திட்டங்கள்! முழு விபரம் இதோ!

அஞ்சல் துறையில் அதிக வட்டி மற்றும் அதிக வருமானம் தரும் சேமிப்பு திட்டங்கள் ஏராளமாக உள்ளன. மேலும் ஏராளமான வேலை வாய்ப்புகளை அறிவித்து வருகின்றன. இதனை தொடர்ந்து தற்போது பிரான்சைஸ் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் எளிதாக சம்பாதிக்கலாம்.

பிரான்சைஸ் திட்டம்

கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றன. அதனால் பொது மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக தங்கள் முதலீடுகளை அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் தங்கள் பணத்தை செலுத்த தொடங்கின. மேலும் அஞ்சல் துறையில் அதிக வட்டி மற்றும் அதிக வருமானம் தரும் சேமிப்பு திட்டங்கள் ஏராளமாக உள்ளன. அதில் தற்போது பிரான்சைஸ் திட்டம் ஒன்றை தபால் துறை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம். இதில் இரண்டு விதமான பிரான்சைஸ் திட்டம் உள்ளது. அதில் ஒன்று தபால் நிலைய பிரான்சைஸ், மற்றொருன்று தபால்நிலைய முகவர்கள் பிரான்சைஸ் ஆகும்.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

இவ்விரண்டில் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம். போஸ்டல் ஏஜெண்ட்டுகள் அல்லது தபால் முகவர்கள் என்பவர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வீடு வீடாக சென்று போஸ்டல் ஸ்டாம்புகள் மற்றும் எழுது பொருட்களை வழங்கும் நபர் ஆவார். இந்தத் திட்டத்தில் இணைவதற்கு 18 வயது நிரம்பியவராக மற்றும் இந்தியனாக இருத்தல் வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் இணைவதன் மூலம் ஒரு ரெஜிஸ்டர் போஸ்ட்டுக்கு 3 ரூபாய் மற்றும் ஒரு ஸ்பீட் போஸ்ட்டுக்கு 5 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அத்துடன் ரூ.100 முதல் ரூ.200 மணி ஆர்டருக்கு ரூ.3.50 மற்றும் ரூ.200-க்கும் மேற்பட்ட மணி ஆர்டருக்கு ரூ.5 வரை சம்பாதிக்கலாம்.

போலீசாருக்கு ஆண்டு சீருடைப்படியாக ரூ.10,000 வழங்கப்படும் – அரசு ஒப்புதல்!

இதனை தொடர்ந்து 1000-க்கும் மேற்பட்ட புக்கிஙிகள் மற்றும் ஸ்பீட் போஸ்ட்டுகளுக்கு 20% கமிஷன் மற்றும் தபால் தலை, அஞ்சல் எழுது பொருட்கள், பணம் ஆர்டர் படிவம் ஆகியவற்றை விற்பதன் மூலம் 5% கமிஷன் பெற முடியும். மேலும் வருவாய் முத்திரைகள், மத்திய ஆட்சேர்ப்பு கட்டண முத்திரைகள் ஆகியவற்றை விற்பதன் மூலம் 40% கமிஷன் பெற முடியும். இத்திட்டத்தில் இணைவதற்கு ரூ.5000 முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பங்களை பெறலாம் அல்லது அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம். இந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு 14 நாட்களுக்குள் தபால் கோட்ட தலைவர் தங்கள் பிரான்சைஸ் திட்டத்தில் உள்ளதை உறுதி செய்வார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!