Post Office ல் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 20!

0
Post Office ல் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 20!
Post Office ல் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 20!
Post Office ல் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 20!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் அஞ்சல் மோட்டார் சேவை ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Staff Car Driver பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு:

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு Staff Car Driver பணிக்கு காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.07.2022 க்குள் விண்ணப்பிக்கலாம்.இந்த அறிவிப்பின் படி மொத்த காலிப் பணியிடங்கள் 24 ஆகும். மேலும் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு முடித்திருப்பவர்கள் மட்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து Light மற்றும் Heavy motor vehicle க்கான ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு Motor Mechanism தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் Light மற்றும் Heavy motor vehicle களில் குறைந்தது 3 ஆண்டுகள் ஓட்டுநர் பணி செய்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். இத்துடன் விண்ணப்பதாரர்கள் Pay matrix Level-01 as per 7th CPC என்கிற ஊதிய அளவின்படி, அஞ்சல் துறையில் Dispatch Rider (Group C) பணியில் பணிபுரிபவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து அல்லாதோர் கோவிலில் நுழைய தடையில்லை – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

இந்த அஞ்சல் துறை பணிக்கு என தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு குறைந்தது ரூ.19,900 மாத ஊதியம் அளிக்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும். மேலும் பணிக்கு தகுதியானவர்கள் Trade test அல்லது Driving test மூலம் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு 20.07.2022 ம் தேதி மாலை 5 மணிக்குள் வரும்படி பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தபால் செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!