10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – அஞ்சல் துறை அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதற்கான முழு விவரங்களையும் கீழே முழுமையாக பார்ப்போம்.
அஞ்சல் துறை:
தமிழ்நாட்டில் பரவி வந்த கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழக அரசு பல வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கின் நிறைய தளர்வுகளை விடுத்துள்ளது அரசு. அதன் காரணமாக சமீபத்தில் tnpsc குரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் குறித்த பல தகவல்களை அறிவித்துள்ளது. அதன் மூலம் நிறைய பட்டதாரிகள் பயன் பெற்று கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு தெரிவித்து உள்ளது. மேலும் இதுதவிர பல வேலைவாய்ப்புகளையும் தமிழக அரசு தெரிவித்து வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஓய்வூதியத் தொகை ரூ.1.25 லட்சம் வரை உயர்வு!
இந்த நிலையில் தற்போது இந்திய அஞ்சல் துறை முக்கிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பில் கிராம் டக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர் மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் என்ற பணியிடத்துக்கு அறிவித்து உள்ளனர். மேலும் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கான வயது வரம்பு 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், கல்வித்தகுதியாக,10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து, இந்த வேலைவாய்ப்புற்கு விண்ணப்பிக்கும் முறையாக, https://indiapostgdsonline.