தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நவ.26 நேர்முகத்தேர்வு!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - நவ.26 நேர்முகத்தேர்வு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - நவ.26 நேர்முகத்தேர்வு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நவ.26 நேர்முகத்தேர்வு!

தமிழகத்தில் சேலம் மாவட்டம் மேற்கு கோட்ட அஞ்சலகத்தில் நாளை (26.11.2021) பி.எல்.ஐ, ஆர்.பி.எல்.ஐ ஆகிய பணிக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது. வேலை நாடுநர்கள் இதில் பங்கேற்று பயன்பெறலாம் என்று அஞ்சலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவர் பணி:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து அரசு மக்களின் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலையை நோக்கி திரும்பி வருகின்றனர். இந்த நேரத்தில் தளர்வுகளின் ஒரு பகுதியாக அரசு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதனால் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை அளிக்க முன் வந்துள்ளதுள்ளனர். இதனால் மாவட்டம் தோறும் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. நேர்காணல் முகாம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

திருப்பத்தூரில் நவ.27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 70க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

அதனை தொடர்ந்து இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி தேர்வுகளும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மற்ற துறைகளை தொடர்ந்து அஞ்சல் துறை வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டம் அஞ்சல் கோட்டத்தில் பி.எல்.ஐ, ஆர்.பி.எல்.ஐ போன்ற பணி நியமங்களுக்கான நேர்காணல் நவம்பர் 26 ம் தேதி நடைபெறவுள்ளது.

IPL 2022 சென்னையில் ஏப்ரல் 2ம் தேதி தொடக்கம்? ரசிகர்கள் உற்சாகம்! 2 புதிய அணிகள் சேர்ப்பு!

நேர்காணல் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. நேர்காணலில் பங்கேற்பவர்கள் தங்களின் சுய விவரக்குறிப்பு, கல்வி தகுதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆகிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மேலும் இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 50 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சேலம் மேற்கு கோட்டம் முகவரிக்கு தபால் மூலமாகவும் அனுப்பலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!