10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை – டிச.28ம் தேதி கடைசி நாள்!
மத்திய அரசின் கீழ் இயங்கும் அஞ்சல் துறைகளில் பணிபுரிய தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வரும் டிச.28ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையில் வேலை:
நாடு முழுவதும் தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு ஆகிய இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த கிராமிய அஞ்சல் காப்பீட்டு திட்டத்தை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நேரடி முகவர் பணிக்கு ஆள்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்களை அஞ்சல் நிலையங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இலவச வைஃபை வசதி! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு விருதுநகர் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் டி.ஏ.கல்யாண வரதராஜன் அவர்களால் செய்தி குறிப்பு மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு முறை பாகிஸ்தானுக்கு பறக்க உள்ள நியூஸிலாந்து அணி – கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!
இந்த கிராமிய அஞ்சல் காப்பீட்டு முகவர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் டிச.28ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 2 போட்டோ, பான் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், கல்விச்சான்று நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர், விருதுநகர் என்ற முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை தேடும் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.