Post Office பெண் குழந்தைகளுக்காக சேமிக்க நினைக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு – அருமையான திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் பெண் குழந்தைகளுக்காக சேமிக்க சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம், முதிர்வு தொகை உள்ளிட்ட பலன்களை பற்றி பார்க்கலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்
இந்திய அஞ்சல் துறை பல்லாயிரக்கான வாடிக்கையாளர்களை கொண்டு செயல்படுகிறது. ஏனெனில் இதில் உள்ள சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால் அதிகமான வட்டி தொகையை பெற முடிகிறது. தற்போது இதில் உள்ள சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பற்றி விரிவாக பார்க்கலாம். இந்த சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்காக சேமிக்க மட்டுமே முடியும். இந்த திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டுமே கணக்கை தொடங்க முடியும்.
இந்த திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.150000 வரை முதலீடு செய்ய முடியும். இதில் ஒரு ஆண்டுக்கு 7.6% வட்டி விகிதம் வரை வழங்கப்படுகிறது. இதில் முதலீடு செய்யும் தொகைக்கு 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரி விலக்கு கிடைக்கிறது. அத்துடன் இந்த திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.1000 செலுத்த தவறி விட்டால் தானாகவே திட்டம் செயலிழந்து விடும். இதனை ரூ.50 அபராதம் செலுத்துவதன் மூலமாக மீண்டும் செயல்பட செய்து விடலாம்.
மதுரை மாவட்ட போக்குவரத்தில் மாற்றங்கள் – மேம்பால பணிகள் எதிரொலி!
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை 14 ஆண்டுகள் வரை மட்டுமே தொடர முடியும். இதில் ஒரு ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.1 லட்சம் என்ற விதம் 14 ஆண்டுகள் முடிவில் ரூ.14 லட்ச தொகை வரை சேமிக்க முடிகிறது. அதன் பின்பு 21 ஆண்டுகள் கழித்து வட்டி கணக்கிடப்படுகிறது. அத்துடன் முதலீடு தொகையுடன் வட்டி சேர்க்கப்பட்டு ரூ.46 லட்சம் வரை கிடைக்கிறது. அதேபோல் தற்போது ஒரு ஆண்டுக்கு ரூ.50000 வீதம் 14 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வட்டி கணக்கிடப்பட்டு ரூ.23 லட்சம் வரை சேமிக்க முடிகிறது. இதில் முதிர்வு காலம் முடியும் முன் பெண் குழந்தைக்கு திருமணம் நடைபெற்றால் கணக்கு தானாக முடிக்கப்படும்.