Post Office சேமிப்பு கணக்கு வைத்துள்ளோர் கவனத்திற்கு – வட்டி விகிதம் குறைப்பு!
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை தபால் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக தபால் வங்கி அறிவித்துள்ளது.
வட்டி விகிதம் குறைப்பு:
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி பொது மக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக, இந்திய தபால் துறை செயல்படுத்தி வருகிறது. இதில் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் வங்கிச் சேவைகளை பெற முடியும். இந்த பேமென்ட் பேங்க் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வகையில் சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் அறிவித்துள்ளது.
இரவு 8 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி – பள்ளிகள் மீண்டும் திறப்பு! அரசு அறிவிப்பு!
தற்போதைய அறிவிப்பின்படி, ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புகளுக்கு வட்டி விகிதம் 2.25%ஆகா இருக்கும். அதேபோல் ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.2 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 2.50 % ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன் 2021ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் ரூ.1 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 2.50 %ஆகவும், ரூ.2 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 2.75 %ஆகவும் இருந்தது.
இந்திய ராணுவத்தில் 10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – குரூப் ‘சி’ காலிப்பணியிடங்கள்!
மேலும் வாடிக்கையாளர்கள் பேலன்ஸ் நிலவரத்தை பொறுத்து காலாண்டு அடிப்படையில் வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த வகையில் வங்கிகளுடன் இணைந்து போஸ்ட் ஆபீஸ் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜனவரி 1ஆம் தேதி முதல் வங்கி சேவைகளுக்கான கட்டணங்களை இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.