Post Office காப்பீட்டு திட்டம் – முதிர்வு காலத்தின் போது ரூ.13.72 லட்சம் ரிட்டன்!
இன்றைய காலத்தில் அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு பெரிய தொகை வேண்டும் என்றால் அதற்கு நாம் இப்போதிலிருந்தே சேமிக்க வேண்டும். அதற்கு உதவும் வகையில் அஞ்சலகங்கள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இது குறித்து இப்பதிவில் காண்போம்.
சேமிப்பு திட்டம்:
இந்தியாவில் பரவிய கொரோனா பெருந்தொற்று நமக்கு சேமிப்பின் பயனை நன்றாக உணர்த்தியது. அந்த கால கட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த பலர் அத்தியாவசிய செலவுகள் மற்றும் மருத்துவ செலவை சமாளிப்பதில் சிக்கலை எதிர்கொண்டனர். அப்போது சிலருக்கு தங்களின் நீண்ட நாள் சேமிப்பு கைகொடுத்தது. சிலர் அதுவும் இல்லாமல் பொருளாதார பிரச்சனையை எதிர்கொண்டனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தான் மக்கள் சேமிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். இதனை அறிந்து அஞ்சல் துறை ஏழை எளிய மக்கள் சேர்ந்து பயன் பெறும் வகையிலான குறைந்தபட்ச இருப்புத் தொகை கொண்ட சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டத்தில் ஒன்று கிராமப்புற அஞ்சல் நிலைய காப்பீடு திட்டம் இதில் 19 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் இணையலாம்.
அதிகரிக்கும் பறவை காய்ச்சல் – ஈரோடு மாவட்ட ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
இதன் முதிர்வு காலம் 10 மற்றும் 15 ஆண்டுகள் ஆகும். இதில் விருப்பமான முதிர்வு காலத்தை நீங்களே தேர்வு செய்யலாம். இதில் 25 வயதுள்ள ஒரு நபர் ரூ.7 லட்ச காப்பீடு திட்டத்தில் இணைந்து 20 ஆண்டு கால முதிர்வு காலத்தை தேர்தெடுத்து டெபாசிட் செய்தால் பாலிசி முடிவில் அவருக்கு சுமார் ரூ.13.72 லட்சம் கையில் கிடைக்கும். ஒருவேளை முதிர்வு காலத்திற்கு முன் பாலிசிதாரர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு காப்பீட்டு தொகை மற்றும் போனஸ் வழங்கப்படும்.