Post Office இல் தினசரி ரூ.1400 சேமித்தால் 35 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டம்!
இந்திய அஞ்சல் துரையின் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் மாதம் ரூ.1411 முதலீடு செய்து முதிர்வு காலத்தில் சுமார் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ் பெறலாம். இத்திட்டம் கிராமப்புற மக்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.
கிராம சுரக்ஷா யோஜனா:
இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் வங்கிகளை விட அதிக லாபம் அளிக்க கூடிய வகையில் வட்டியும் அளிக்கப்படுகிறது. இதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் கால அளவும் உள்ளது. இதன் மூலம் அஞ்சலக திட்டத்தில் சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டித் தொகையும் கிடைக்கும். மற்ற திட்டங்களை தொடர்ந்து பெண் குழந்தைகள் உதவும் வகையில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் தான் அதிக வட்டி வழங்கப்படுகிறது.
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – உத்தேச விடைகள் வெளியீடு! அடுத்து செய்ய வேண்டியது என்ன?
அதனை தொடர்ந்து கிராமபுற மக்களுக்கு உதவும் வகையில் கிராம சுரக்ஷா யோஜனா திட்டமும் உள்ளது. இத்திட்டத்தில் 19 வயது நிறைந்தவடைந்த குடிமக்கள் சேர்ந்து முதலீடு செய்யலாம் ரூ. 10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். அதற்கான பிரீமியம் தொகையை ஒவ்வொரு மாதமும், காலாண்டும், 6 மாதம் மற்றும் ஆண்டு அடிப்படையில் செலுத்தலாம். இந்த திட்டத்தில் மாதம் ரூ.1411 முதலீடு செய்து முதிர்வு காலத்தில் சுமார் ரூ.35 லட்சம் பெறலாம். இந்த பாலிசியில் சேர்ந்து 5 ஆண்டுகளின் முடிவில் எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றுவதற்கான கூடுதல் அம்சமும் இதில் வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
ஒருவர் 19 வயது முதலீட்டாளர் 55 வயது வரை ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ய விரும்பினால் அதற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1515 பிரீமியம் செலுத்த வேண்டும். மேலும் 58 வயது வரை முதலீடு செய்ய விரும்பினால் ரூ.1463 முதலீடு செய்ய வேண்டும். 60 வயது வரை முதலீடு செய்ய விரும்பினால் மாதமும் பிரீமியமாக ரூ.1411 டெபாசிட் செய்ய வேண்டும்.முதலீடு செய்யும் போது 55 வயதில் முதலீட்டாளர் ரூ.31.60 லட்சமும், 58 வயதில் ரூ.33.40 லட்சமும், 60 வயதில் முதிர்வுத் தொகையாக ரூ.34.60 லட்சமும் திரும்ப பெறலாம். இந்த சேமிப்பு திட்டத்தில் கடன் வசதியும் அளிக்கப்படுகிறது.