Post Office ன் இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம் – ரூ. 1000 போதும் கணக்கு தொடங்கலாம்! முழு விவரம் இதோ!
இந்திய அஞ்சல் துறை ஏழை எளிய மக்களை கருத்தில் கொண்டு பல வகையான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அதிக லாபம் தரும் சேமிப்பு திட்டம் குறித்த முழு விவரத்தையும் இப்பதிவில் காண்போம்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டம்:
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். ஏனெனில் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் எந்த வித ரிஸ்க்கும் இல்லாத பாதுகாப்பான முதலீட்டையும் லாபத்தையும் அளிக்கிறது. அத்துடன் வட்டி விகிதங்களும் அதிகமாக உள்ளது. தற்போது அஞ்சலகத்தில் பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு திட்டம், கிராம சுரக்ஷா யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் நல்ல லாபம் தரக்கூடிய மற்றும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்ற திட்டங்களாக உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து அஞ்சலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் முதலீட்டுக்கு உத்தரவாத வருமானம் அளிக்கக்கூடிய திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஆனால் நீங்கள் 10 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்யும் போது வருமானச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இதன் முதிர்வு காலத்தின் போது முழுத்தொகையும் வழங்கப்படும்.
வங்க கடலில் நிலைகொண்டுள்ள புதிய புயல் – தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை!
Exams Daily Mobile App Download
இந்த கிசான் விகாஸ் பத்ராவை அடமானமாகவோ அல்லது பத்திரமாகவோ வைத்து நீங்கள் கடன் பெறலாம். இந்த திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் வசதியும் உண்டு. இதில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் செலுத்தி முதலீட்டை தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு கிடையாது. மேலும் இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 124 மாதங்கள் அதாவது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் கழித்து இரட்டிப்பாகிறது.