Post Office தினசரி ரூ.50 முதலீட்டில் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ் – கிராம சுரக்ஷா யோஜனா திட்டம்!
இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தங்களுடைய பணத்தைச் சேமிப்பதற்கான முக்கியமான வழியாக இந்திய அஞ்சல் துறை செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆபத்து காரணி குறைவானது மற்றும் வருமானம் நன்றாக இருக்கும். அத்தகைய திட்டங்களில் ஒன்று ‘கிராம் சுரக்ஷா திட்டம்’. இந்த திட்டத்தில், தினமும் 50 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் முதிர்வு நேரத்தில் 35 லட்சம் ரூபாய் வரை பெறலாம்.
கிராம சுரக்ஷா யோஜனா திட்டம்:
இந்திய அஞ்சல் துறை ஏழை எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பாதுகாப்பான மற்றும் நல்ல வருமானத்தை வழங்க கூடிய பல சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ், பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் கிராம சுரக்ஷா யோஜனா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் போஸ்ட் ஆபீஸ் கிராம சுரக்ஷா யோஜனா என்பது எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசிக்கு மாற்றுவதற்கான விருப்பத்தின் கூடுதல் அம்சத்துடன் கூடிய முழு ஆயுள் காப்பீட்டு பாலிசி ஆகும்.
Exams Daily Mobile App Download
அதாவது பாலிசியின் கீழ், பாலிசிதாரர் குறைந்த பிரீமியங்களை செலுத்தி அதிகபட்ச பலன்களை பெறலாம். கிராம சுரக்ஷா யோஜனா பாலிசியின் படி ஒரு நபர் திட்டத்தின் கீழ் பாலிசி மதிப்பு ரூ.10 லட்சமாக இருந்தால், மாதம் ரூ.1,515 முதலீடு செய்தால் (ஒரு நாளைக்கு ரூ.50) அவருக்கு மெச்சூரிட்டிக்கு பின் சுமார் ரூ.35 லட்சம் வரை கிடைக்கும். அதாவது இந்த பாலிசியில் முதலீடு செய்வோர் 55 ஆண்டு காலத்திற்கு ரூ.31,60,000, 58 ஆண்டுகளுக்கு ரூ.33,40,000 மற்றும் 60 ஆண்டுகளுக்கு ரூ.34.60 லட்சம் வரை மெச்சூரிட்டி பெனிஃபிட்டை பெறுவார்கள்.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு
மேலும் 18 வயதில் இந்த திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்ய தொடங்கினால், 55 ஆண்டுகள் வரை ரூ.1,515 பிரீமியமாக செலுத்தலாம். பிரீமியத்தை செலுத்த வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. காப்பீட்டுக் காலத்தின் போது குறைபாடு ஏற்பட்டால், வாடிக்கையாளர் நிலுவைத் தொகையைச் செலுத்தி கவரேஜை மீண்டும் தொடங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தின் தகுதி, அம்சங்கள் மற்றும் நன்மைகள்:
- இந்த பாலிசியை எடுப்பதற்கான குறைந்தபட்ச வயது 19, அதிகபட்ச வயது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ 10,000, அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை ஆகும்
- இந்த திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடன் வசதி உண்டு
- பாலிசிதாரர் 3 ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் செய்யலாம். ஒருவேளை இந்த பாலிசிதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு முன் பாலிசியை சரண்டர் செய்தால் அவர்களுக்கு போனஸ் பெறும் தகுதி கிடையாது
- பிரீமியம் செலுத்தும் வயதை 55, 58 அல்லது 60 வயதாக தேர்வு செய்து கொள்ளலாம்.