Post Office இல் மாதம் ரூ.1000 முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானம் – அருமையான சேமிப்பு திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம், முதிர்வு தொகை உள்ளிட்ட பலன்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
சேமிப்பு திட்டம்
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் வங்கிகளை காட்டிலும் இரட்டிப்பு லாபங்கள் கிடைப்பதால் பொதுமக்கள் அதிகளவு இதில் இணைகின்றனர். இந்த திட்டத்தில் இணைய குறைந்தபட்சமாக ரூ.100 செலுத்தினாலே போதும் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். அதனால் சாதாரண மக்கள் கூட இந்த சேமிப்பு திட்டங்களில் இணைகிறார்கள். அத்துடன் அஞ்சல் அலுவலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுவதால் பணத்திற்கு முழு பாதுகாப்பும் கிடைக்கிறது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5000 பரிசு – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
தற்போது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தை பற்றி விரிவாக பார்ப்போம். இதில் குறைந்தபட்சமாக ரூ.1000யை செலுத்துவதன் மூலமாக கணக்கை தொடங்க முடியும். இதில் அதிகபட்சமாக செலுத்த வரம்பு ஏதும் இல்லை. இதில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஒருவர் தங்களுக்காகவோ அல்லது மைனர்களுக்காகவோ சேமிப்பு கணக்கைத் தொடங்க முடியும். இந்த திட்டத்தில் 6.9% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும் இதில் வருமான வரிச் சட்டத்தின் 80C இன் கீழ் வரி விலக்கும் கிடைக்கிறது.
இந்த திட்டத்தில் கணக்கை தொடங்க விரும்புவர்கள் ஆதார் அட்டை, வீட்டுச் சான்று, கேவிபி விண்ணப்பப் படிவம், வயதுச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் , மொபைல் எண் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் சேமிப்புத்தாரர் 10 ஆண்டுகளுக்கு சேமித்தால் அவர்களின் முதலீடு பணம் இரட்டிப்பாக மாறும் என்று அஞ்சல் அலுவலக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரத்தின் முதிர்வு 2 ஆண்டுகள் ஆகும். அதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு பணமாக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிக் கொள்ளவும் வசதிகள் உள்ளது. அத்துடன் இந்த கணக்கிற்கு நாமினியும் தேர்வு செய்யலாம்.