Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவரா நீங்கள் – அப்போ இதை தவறாமல் படிங்க!
இந்திய அஞ்சல் துறை ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தற்போது வாடிக்கையாளர் தங்கள் சேமிப்பு கணக்கை நிறைவுபெறும் போது சில விதிமுறைகளை பின்பற்றமாறு அஞ்சல் துறை கொண்டுவந்துள்ளது.
சேமிப்புதாரர் கவனத்திற்கு
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு பொருளாதார பிரச்சனைகளை பொதுமக்கள் சந்தித்து வந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முறைகளில் சேமிக்க முடிவு செய்தனர். இதில் குறிப்பாக அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிகளவு முதலீடு செய்ய தொடங்கினர். ஏனெனில் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி விகிதம் வங்கிகளை காட்டிலும் இரண்டு மடங்கு லாபம் தரக்கூடியதாக உள்ளது. தற்போது இந்த சேமிப்பு திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை – வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?
இதனை தடுக்க அஞ்சல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கும் போது சேமிப்பு தாரரின் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது. அத்துடன் கணக்கு தொடங்கிய 6 மாத காலத்திற்குள் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சேமிப்பு கணக்கை முடிக்க உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு தெரிவித்துள்ளது.
விஷ பாம்பு தாக்கிய வாவா சுரேஷின் நிலை – 65 விஷமுறிவு மருந்து பாட்டில்கள்!
இதில் தெரிவித்தாவது, அஞ்சல் அலுவலகத்தில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் அல்லது டெர்ம் டெபாசிட் அல்லது மாதாந்திர டெபாசிட் திட்டம் அல்லது மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் அல்லது கிசான் விகாஸ் பத்ரா திட்டம் மற்றும் அனைத்து சேமிப்பு திட்டங்களிலும் கணக்கு முடியும் போது தங்கள் சேமிப்பு புத்தகத்தை கட்டாயமாக அஞ்சல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அத்துடன் சேமிப்பு கணக்கை மூடப்படுவது பற்றிய தகவலை சரிபார்த்து அதன்பின் கண்காணிப்பாளர் ‘கணக்கு நிறைவு அறிக்கை’ என்பதை தயார் செய்வார். இதனை வாடிக்கையாளருக்கு நகல் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றும் அஞ்சல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கு எந்தவித கட்டணமும் வசூல் செய்யப்படமாட்டாது.