Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் விரைவில் உயர்வு!
இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை 0.90 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது வங்கிகள் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதையடுத்து தற்போது அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வட்டி உயர்வு
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் நிதி நெருக்கடியை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு வங்கிகளில் டெபாசிட்டுகளுக்கான திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அதன்படி தற்போது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கும் வட்டி விகிதம் அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஒவ்வொரு காலாண்டிற்கும் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மதிப்பாய்வு செய்து மத்திய அரசு அறிவிக்கிறது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையில் பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புச் சான்றிதழ், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் உள்ளிட்ட பல வகையான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பெரும்பாலானோர் இந்திய அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கை தொடங்கியுள்ளனர். ஏனெனில் வங்கிகளை காட்டிலும் இதில் இரட்டிப்பு லாபத்தை பெற முடிகிறது. இதையடுத்து தற்போது அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் ஜூலை 1 முதல் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 0.50 முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அதன்படி தற்போது பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 7.1% வட்டி விகிதமும், தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் 6.8% வட்டி விகிதமும், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் 7.6% வட்டி விகிதமும் மற்றும் கிசான் விகாஸ் பத்திர திட்டத்திற்கு 6.9% வட்டி விகிதமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வட்டி விகிதம் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு சிறு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.