Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் – 35 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ்! பொதுமக்கள் கவனத்திற்கு!
அஞ்சலகத்தில் உள்ள கிராம சுரக்ஷா திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்த முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெற முடியும். மேலும் 60 வயதில் முதிர்வு தொகையாக ரூ.34.60 லட்சமும் பெறுவார்கள்.
கிராம சுரக்ஷா திட்டம்:
இந்தியாவில் கொரோனா பரவலால் மக்கள் வேலையிழந்து வருமானம் இன்றி பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் சிலருக்கு சேமிப்பு பணம் கை கொடுத்தது. அதனால் மக்கள் தற்போது அதிக அளவில் சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் சிறந்த தேர்வாகும். செல்வ மகள் சேமிப்பு, மாதாந்திர வருமான திட்டம், தொடர் வைப்பு நிதி, காப்பீடு திட்டம் போன்றவை மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து கிராம சுரக்ஷா திட்டம் முதலீட்டாளர்க்ளுக்கு அதிக லாபத்தை அளிக்கிறது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? வலுக்கும் கோரிக்கை!
இத்திட்டத்தில் 19 வயது நிறைந்தவடைந்த குடிமக்கள் சேர்ந்து முதலீடு செய்யலாம் ரூ. 10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஒவ்வொரு மாதமும் ரூ.1515 பிரீமியம் செலுத்த வேண்டும்.58 வயது வரை முதலீடு செய்ய விரும்பினால் ரூ.1463 டெபாசிட் செய்ய வேண்டும். இத்திட்டத்தில் இதற்கான பிரீமியங்களை ஒவ்வொரு மாதமும், காலாண்டும், ஆறு மாதம் மற்றும் ஆண்டு அடிப்படையில் முதலீட்டாளர்கள் செலுத்தலாம். 60 வயது வரை முதலீடு செய்ய விரும்பினால் ஒவ்வொரு மாதமும் பிரீமியமாக ரூ.1411 செலுத்த வேண்டும்.
Exams Daily Mobile App Download
அவ்வாறு செலுத்தினால் 55 வயதில் முதலீட்டாளர் ரூ.31.60 லட்சமும், 58 வயதில் ரூ.33.40 லட்சமும், 60 வயதில் முதிர்வுத் தொகையாக ரூ.34.60 லட்சமும் பெறுவார்கள். இத்திட்டத்தில் கடன் வசதியும் உள்ளது. மேலும் 4 ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு மட்டுமே கடன் கிடைக்கும். அவசர காலங்களில 30 நாட்கள் சலுகை காலம் அனுமதிக்கப்படுகிறது. முதலீடு செய்த நாளில் இருந்து, பாலிசியை 3 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யலாம். 5 ஆண்டுகளுக்கு முன்பு சேமிப்பை மூடினால் போனஸ் கிடையாது.