விஜய் டிவியில் முடிவுக்கு வந்த பிரபல சீரியல் – கடைசி நாளில் கண்கலங்கிய நடிகர், நடிகைகள்! வைரலாகும் வீடியோ!
கிட்டத்தட்ட 5 வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஓடிய நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் தற்போது நிறைவடைய போகிறது. செட்டை விட்டு செல்ல மனசு வராமல் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கண் கலங்கி தவிக்கும் படியான வீடியோ வைரலாகி வருகிறது.
நாம் இருவர் நமக்கு இருவர்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. டிஆர்பியிலும் இந்த தொலைக்காட்சி சீரியல்கள் தான் முன்னிலையில் இருந்து வருகிறது. அந்த வகையில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. தற்போது இன்னும் சில நாட்களில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் நிறைவடைய போகிறது.
சீரியல்களில் என்ன தான் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் சண்டை போட்டு கொண்டாலும் நிஜ வாழ்க்கையில் ஒரே குடும்பமாக அண்ணன், தங்கை, நண்பர்களாக தான் பழகி வருகின்றனர். காலையில் ஷூட்டிற்கு வந்தால் ஷூட்டிங் முடிய இரவு ஆகிவிடும். கிட்டத்தட்ட 5 வருடங்களாக ஒரே குடும்பமாக பழகிவிட்டு தற்போது பிரிய போகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என சீரியல் நடிகர்கள் நடிகைகள் என அனைவருமே கண் கலங்கியுள்ளனர்.
சீரியல் நிறைவடைந்துவிட்டாலும் சந்தித்துக்கொள்ள தான் போகிறோம். ஆனால், இந்த அளவுக்கு ஒரே செட்டில் 5 வருடங்களாக சண்டைபோட்டு கொண்டு இருந்த அனைத்து தருணங்களையும் மறக்கவே முடியாது என கூறி செட்டை விட்டு வெளியேறவே மனசு இல்லாமல் கண் கலங்கி நிற்கின்றனர். ரசிகர்களுமே நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் நிறைவை எண்ணி கவலைப்பட்டு கொண்டிருக்கின்றனர். மீண்டும் வேறு ஒரு சீரியல் மூலமாக நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.