பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – இளசுகள் ஆர்வம்! வெளியான தகவல்!
தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட மக்களை கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸின் ஆறாவது சீசன் கடந்த 3 நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக களமிறங்க இருக்கும் பிரபல நடிகை குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
மற்ற மொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், ஆறாவது சீசன் 3 நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த 20 மாறுபட்ட பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். ஒரு சிலர் பரிட்சயமான முகமாக இருந்தாலும், பலர் அதில் தெரியாத முகமாக இருக்கின்றனர். அந்த வகையில் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட முதல் நாள் முதல் டாஸ்க் எல்லாம் வித்தியாசமாக இருந்து வருகிறது.
மேலும் கடந்த சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் பலர் போட்டி மீது கவனம் செலுத்தி வருகின்றனர். அதுவே நிகழ்ச்சியை ரசிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் தற்போது இன்ஸ்டாவில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ள பிரபல நடிகை கிரண் வர இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ச்ச மனுஷன் பாவம் யா.. பிக் பாஸில் நுழைந்த சீரியல் நடிகை ரச்சித்தா – முன்னாள் கணவர் வெளியிட்ட பதிவு!
Exams Daily Mobile App Download
இது குறித்த உறுதியான செய்திகள் வெளியான நிலையில், அவருடைய என்ட்ரிக்காக இளசுகள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். மேலும் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 2 லட்சம் சம்பளம் கேட்டதாகவும், தற்போது விஜய் டிவி 1.5 லட்சம் சம்பளம் கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பெரிய பெரிய நடிகைகள் கலந்து கொண்டுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு மட்டும் இவ்வளவு தொகை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ள செய்தியை கேட்டு சக நடிகைகள் சிலர் பொறாமைப்படுவதாகவும் தகவல் கசிந்துள்ளது.