கதிரை ஏற்கும் பூவரசி, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பூவே உனக்காக” சீரியல் ப்ரோமோ!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பூவே உனக்காக” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
“பூவே உனக்காக” சீரியல்
சன் தொலைக்காட்சிகளில் பல வித விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பூவே உனக்காக”. இந்த சீரியலில் ஆரம்பத்தில் பூவரசி மற்றும் கதிர் இருவரும் காதலிக்கின்றனர். இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நன்றாக வாழ ஆரம்பிக்கின்றனர். அந்த நேரத்தில் பூவரசி கர்ப்பமாகி விடுகிறார். ஆனால் பூவரசியை கதிர் சந்தேகப்படுகிறார். இதனை அறிந்து கொள்ளும் பூவரசி கதிரை வெறுத்து விடுகிறார்.
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு – விண்ணப்பம் வரவேற்பு!
ஒரு கட்டத்திற்கு பிறகு கதிர் தனது தவறை புரிந்து கொண்டு, பூவரசியிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், பூவரசி கதிரை ஏற்க மறுத்து விடுகிறார். இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இப்படியாக இருந்தாலும், கதிர் ஒரு புறம் மஹேஸ்வரி பூவரசியை ஏதேனும் செய்து விடுவாரோ என்று பயந்து அவரது போனில் சிப் வைத்து அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இந்த சூழலில், பூவரசி மற்றும் அவரது குழந்தையினை கொலை செய்ய வேண்டும் என்று குக்கரை வெடிக்க வைக்கிறார். ஆனால், அதிர்ஷ்டவசமாக பூவரசிக்கு ஒன்றுமே ஆகவில்லை. ஆனால், காலில் அடிபட்டு விடுகிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் காலில் பூவரசிக்கு அடிபட்டதால் அவருக்கு துணையாக கதிர் மாறுவேடத்தில் உதவ வருகிறார். ஆனால், தன்னை ஒருவர் பார்த்து கொண்டே இருப்பது தனக்கு பிடிக்கவில்லை என்று பூவரசி மறுத்து விடுகிறார். பூவரசிக்கு அடிபட்டதால் வீட்டினர் அனைவரும் பயந்து விடுகின்றனர். பூவரசியை கதிர் தூக்கி கொண்டு வருகிறார். அப்போது அனைவரும் மாறுவேடத்தில் இருக்கும் கதிருக்கு நன்றி தெரிவிக்கின்றனர். அப்போது அனைவரும் கதிரை வீட்டிற்கு உள்ளே அழைக்குமாறு பூவரசியிடம் கூறுகின்றனர். கடைசியில், பூவரசி அவரை கூப்பிட்டு விடுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.