Post Office இல் ஆண் குழந்தைக்கான சேமிப்பு – ரூ.500 முதல் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்!
அஞ்சலகத்தில் ஆண் குழந்தைகளுக்கு உதவும் வகையிலும் அவர்களின் வருங்கால சேமிப்பிக்கு உதவும் வகையிலும் பொன்மகன் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த முழு தகவல்களை இப்பதிவில் காண்போம்.
பொன்மகன் சேமிப்பு திட்டம்:
இந்திய அஞ்சல் நிலையம் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் சாமானிய மக்கள் முதல் அனைவரும் பயனடையும் வகையில் உள்ளதால் பெரும்பாலும் மக்கள் அஞ்சலகத் திட்டங்களில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். அஞ்சலகத்தில் பெரியோர்களுக்கு மட்டுமல்லாது குழந்தைகளுக்கும் சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அந்த வகையில் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளது. இந்த திட்டம் மத்திய அரசால் கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தையின் பேரில் கணக்கு தொடங்கலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ரூ.8000 சம்பள உயர்வு விரைவில் அறிவிப்பு!
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 செலுத்த வேண்டும். 2 பெண் குழந்தைகள் வைத்துள்ளார்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேரலாம். பெண் குழந்தைகளை தொடர்ந்து ஆண் குழந்தைகளுக்கும் சேமிப்பு திட்டம் உள்ளது. அது தான் பொன்மகன் சேமிப்புத் திட்டம் இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 15 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டது இத்திட்டம். மேலும் இதில் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் தனியாகவே பொன்மகன் சேமிப்புத் திட்ட கணக்கு தொடங்கலாம்.
10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பெற்றோருடன் சேர்ந்த கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம். இக்கணக்கு தொடங்க குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் முகவரிக்கான சான்றாக ஆதார் எண், வருமான வரி விவரங்களுக்காக பான் அட்டை, குழந்தையின் புகைப்படம் போன்ற ஆவணங்கள் அவசியமாகும். பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் 7.6% வட்டி விதிக்கப்படுகிறது. மற்ற திட்டங்களை காட்டிலும் கூடுதலாக வட்டி கணக்கிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் மூன்றாவது நிதியாண்டு முதல் அவசர சூழலின் போது பணத்தை பெற்று கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது