உலகெங்கும் வாழும் மக்களின் முக்கிய வாழ்வாதாரமான உணவினை உற்பத்தி செய்திடும் உழவர் பெருமக்களின் உன்னத விழாவான பொங்கல் திருநாளின் நல்வாழ்த்துகளை எங்கள் வலைத்தளம் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம். தித்திக்கும் பொங்கலுடன் கரும்பு, மஞ்சள் வைத்து இவற்றிக்கும் மேலாக மனதில் மகிழ்ச்சியுடன் சூரியனை வணங்கி இந்த தைத்திருநாள் பெருவிழாவினை கொண்டாடிட விளையும் அனைவரையும் வாழ்த்துகிறோம்.
இந்த பொங்கலை தொடர்ந்து நடைபெற உள்ள மஞ்சு விரட்டு மற்றும் களிப்புடன் காணும் காணும் பொங்கல் அனைத்திற்கும் ஒருங்கே சேர்த்து எங்கள் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியினையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இன்றைய தினத்திலிருந்து விவசாயம் தழைத்திட உள்ளவர்கள் பிழைத்திட நாமும் வாழ்ந்திடுவோம் மற்றும் வணங்கிடுவோம். மறுமொரு முறை அனைவருக்கும் இந்த எங்கள் இணைய தளம் மூலமாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!!