ஜனவரி 14 ஆம் தேதி சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம் – நிர்வாகம் அறிவிப்பு!!
வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக கூடுதல் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை துவங்குகிறது.
கூடுதல் ரயில்
தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (ஜன 2) முதல் அடுத்த 2 நாட்களுக்கு பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த நிலையில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக ஒரு பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக கோவில்களில் முதல் மரியாதை செய்ய தடை – சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!!
Follow our Instagram for more Latest Updates
அதாவது, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து 5 ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக ஒரு ரயில் இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ரயில் ஜனவரி 14 ஆம் தேதியன்று இரவு 10:20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட உள்ளது. இதற்கான முன்பதிவுகள் நாளை (ஜன 13) துவங்க இருக்கிறது. மேலும், இந்த ரயில் ஜனவரி 18 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து மாலை 5:50 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.