தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் முன்பதிவு – பயணிகள் மும்முரம்!

0
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் முன்பதிவு - பயணிகள் மும்முரம்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் முன்பதிவு - பயணிகள் மும்முரம்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் முன்பதிவு – பயணிகள் மும்முரம்!

தமிழகத்தில் வர இருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களின் வசதிக்காக பல ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் அரசால் ஏற்பாடு செய்யப்படும். இது பற்றிய அனைத்து விவரங்களும் விரைவில் அறிவிக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சிறப்பு பேருந்துகள்:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை அளிக்கப்படும். இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் சென்று வருவார்கள். சென்னையில் இருந்து தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அதிக அளவில் மக்கள் பயணிக்க நேர்வதால் தமிழக அரசு முன்கூட்டியே அதிக அளவிலான சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்து விடும். இது போன்ற நேரங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் உள்ள இடங்கள் பற்றாக்குறையாக இருக்கும். இதனால் மக்கள் தனியார் பேருந்துகளை நாடும் நிலை ஏற்படும்.

SBI வங்கியில் 1,226 பேருக்கு வேலைவாய்ப்பு – வயது வரம்பு, விண்ணப்ப முறை விளக்கம்!

இதனால் தனியார் பேருந்துகள் சாதாரண கட்டணத்தை விட அதிக அளவில் வசூலித்து விடும் நிலை உள்ளது. இதனால் சாதாரண மக்கள் அதிக அளவில் பாதிக்கும் நிலை உள்ளது. ஆண்டுதோறும் தனியார் பேருந்துகளின் கட்டணங்களை அரசு நிர்ணயம் செய்து அவற்றை முறையாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில், 2022 ஜனவரி மாதத்தில் வர இருக்கும் பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்து முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனவரி 12 மற்றும் 13 ம் தேதிகளில் சென்னையில் இருந்து அதிக பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் போக்குவரத்து துறைக்கு இயக்கத்தில் இருக்கும் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – யுஜிசி விளக்கம்!

சிறப்பு பேருந்து முன்பதிவு தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இதுவரை பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகளில் 17,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். ஆன்லைன் முறையில் மட்டுமின்றி நேரடியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இம்மாத இறுதியில் சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை அவை இயக்கப்பட உள்ள இடங்களின் விவரங்கள் குறித்து முழு தகவல்களும் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தனியார் பேருந்துகளுக்கான அறிவுறுத்தல்களையும் அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!