தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை 2022 – கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை 2022 - கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை 2022 - கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை 2022 – கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பார் என்று அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.

ரொக்கப்பணம்:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள், வேட்டி, சேலை மற்றும் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்படும். அந்த வகையில் 2022 பொங்கல் பண்டிகை பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய 21 வகை பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மினி ஊரடங்கு அமல் – பள்ளி & கல்லூரிகள் மூடல், புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைவரும் பொருட்களை வழங்கும் வகையில் தமிழக ரேஷன் கடைகளில் ஜனவரி 3ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பொருட்களை பாக்கெட் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகையாக 2500 வழங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பில் ரொக்கப்பணம் குறித்த அறிவிப்புகள் இடம் பெறவில்லை.

நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள் – 10வது முதல் டிகிரி தேர்ச்சி வரை

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் பரிசுத்தொகை வழங்கப்படுவது குறித்து அரசு ஆலோசித்து விரைவில் ரொக்கப்பணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து உணவு வழங்கல்துறை அமைச்சரிடம் கேட்ட போது ரொக்கம் வழங்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!