தமிழகத்தில் பொங்கலுக்கு இத்தனை நாள் லீவா .. எதிர்பார்ப்பில் மக்கள் … அரசு ஆலோசனை!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு நீண்ட நாட்கள் விடுமுறை வரவுள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது.
பொங்கல் விடுமுறை:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பாக ரூ.1000 மற்றும் ஒரு கிலோ அரிசி மற்றும் சர்க்கரை அடங்கிய பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை நேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார்.
Follow our Instagram for more Latest Updates
அதனைத்தொடர்ந்து பொங்கலுக்கு அடுத்த ஏற்பாடாக மக்களின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கு 5 முதல் 6 நாட்கள் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எண்ணி மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர்
ஜனவரி முதல் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் – நிறுவனத்தின் CEO வெளியிட்ட ஷாக் அறிவிப்பு!
இந்த விடுமுறை நாட்களை மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று செலவிட திட்டமிட்டு வருகின்றனர். இதனையடுத்து மக்கள் பயணிக்க ஏதுவாக சிறப்பு மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பேருந்துகளை இயக்குவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.