தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. பொங்கல் பரிசு ரூ.1000 – பெறுவதற்கு ‘இது’ கட்டாயம்!!
தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை பெறுவதற்கு கட்டாயமாக இதனை ரேஷன் அட்டைதாரர்கள் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பல்வேறு வகையான மளிகை பொருட்கள் மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வர இருக்கும் பொங்கல் பண்டிகைக்கான பொங்கல் பரிசு குறித்து கடந்த 19ம் தேதி அன்று தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
Follow our Instagram for more Latest Updates
இதில் இலவச வேட்டி, சேலையின் நிறம் மற்றும் டிசைன்களை மாற்ற இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த முறை பரிசு தொகுப்பில் மளிகை பொருட்கள் எடை குறைவானதாகவும், தரமற்றதாகவும் இருப்பதாக புகார்கள் பெறப்பட்டதால் இந்த பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரொக்க பரிசாக ரூ.1000 வழங்கப்படும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகை வாங்க Correct-ஆன டைம் இது.. தங்கம் விலை திடீர் சரிவு – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!
Exams Daily Mobile App Download
இதன் மூலமாக முறைகேடுகள் நடைபெறாமல் உரிய நபருக்கு ரொக்கப்பரிசு கிடைக்கும். மேலும் தற்போது தமிழகம் முழுவதும் 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் 14.60 லட்சம் பேர் வங்கி கணக்கு தொடங்கவில்லை. அதனால் 14.60 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.