பொங்கல் பரிசாக ரூ.1,000 ரொக்கப்பணம் .. அரிசி கார்டுக்கு மாற்ற கோரிக்கை – தமிழக அரசின் திட்டம்!
தமிழகத்தில் பொங்கல் பரிசு குறித்த அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அரசு தரப்பு வட்டாரங்கள் மூலம் வெளியான தகவல்களை கொண்டு மக்கள் ரேஷன் கார்டு குறித்த கோரிக்கையை வைத்து வருகின்றனர்.
பொங்கல் பரிசு:
தமிழக அரசு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பரிசுகளை அறிவிக்கும். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் எந்த வித ஏற்ற தாழ்வுகளும் இல்லாமல் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதால் இந்த திட்டத்தை மாநில அரசு வருடம் தோறும் செயல்படுத்தி வருகிறது. கடந்த வருடம் தமிழக அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை அளித்தது.
தமிழகத்தில் ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்தா? அமைச்சர் விளக்கம்!
Exams Daily Mobile App Download
ஆனால் வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டையின் அரிசி கார்டு வைத்திருபவர்களுக்கு ரூ.1,000 ரொக்கப்பரிசு அளிக்க இருப்பதாகவும் கூடுதலாக சில மளிகை பொருட்களை அளிக்க இருப்பதாகவும் அரசு தரப்பு வட்டாரகள் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், சர்க்கரை ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஏழ்மை நிலை மக்கள், ரொக்கப்பரிசை பெறுவதற்காக அரிசி கார்டுக்கு தங்களை மாற்றுமாறு கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். இது குறித்து அரசு இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.