தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – வீடு தேடி வரும் டோக்கன்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 - வீடு தேடி வரும் டோக்கன்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 - வீடு தேடி வரும் டோக்கன்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – வீடு தேடி வரும் டோக்கன்!

தமிழகத்தில் அரசு வழங்க உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை அரசு முன்னதாக வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இதற்கான டோக்கன் நேரடியாக வீடுகளில் வந்து தரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு:

தமிழகத்தில் அரசு ஆண்டு தோறும் தமிழகர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு இலவசமாக பொங்கல் வைக்க தேவையான பொருட்களுடன் ரொக்கப்பணமும் வழங்கி வரும். நடப்பு ஆண்டில் பணத்திற்கு பதிலாக பொங்கல் வைக்க தேவையான கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களுடன் சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய பொருட்களும் வழங்கப்பட உள்ளது.

1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.15 வரை பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

இந்த தொகுப்பானது 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் மக்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதற்கான தொகையையும் முதல்வர் ஒதுக்கீடு செய்து முன்னதாக அறிவித்துவிட்டார். பொங்கல் பரிசு திட்டத்தினை தமிழக முதல்வர் விரைவில் தலைமை செயலாக்கத்தில் தொடங்கி வைப்பார். அதன்பிறகு ஜனவரி 3ம் தேதி முதல் அனைவருக்கும் அளிக்கப்பட உள்ளது. அரசு இதற்கான வழிகாட்டுதல்களை முன்னதாக வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த பொருட்கள் முழுவதுமாக கொடுக்கும் பணி அனைத்தும் சம்பந்தப்பட்டமாவட்ட ஆட்சியர்களை தான் சேரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – முதல்வர் உத்தரவு!

இந்நிலையில், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் இது தொடர்பாக செய்தியாளர்களிடம், தகுதி உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பொங்கல் பரிசு கொடுப்பதற்கான நாள், நேரம் போன்றவற்றை குறிப்பிட்டு டோக்கன் வீடு தேடி வந்து கொடுக்கப்படும், இந்த பணிகள் ஜனவரி 3ம் தேதி வரை நடைப்பெறும், ஜனவரி 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதற்கு கைரேகை பதிவு அவசியமில்லை. குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரேஷன் அட்டையை காட்டி பெற்றுச் செல்லலாம். குறிப்பிட்ட நாட்களில் வெளியூர் சென்றிருந்தால், பின்னர் வந்து பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!