தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பில் முறைகேடு – முதல்வர் அதிரடி உத்தரவு!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பில் முறைகேடு - முதல்வர் அதிரடி உத்தரவு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பில் முறைகேடு - முதல்வர் அதிரடி உத்தரவு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பில் முறைகேடு – முதல்வர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் அரசு சார்பாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கியதாக புகார்கள் எழுந்த நிலையில் அந்நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2,15,48,060 குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1,088 கோடி ரூபாய் செலவில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் இருப்பவர்களுக்கு இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இதில் ரொக்கப்பணம் குறித்து எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை.

தமிழகத்தில் முழு ஊரடங்கில் வழக்கம் போல ஆட்டோக்கள் இயங்கும் – அரசு அறிவிப்பு!

இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் அதிருப்தி அடைந்தனர். பல்வேறு தரப்பினர் 5 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுத்தொகையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையிலும் அரசு ரொக்கப் பணம் வழங்கவில்லை. இந்த நிலையில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொப்பில் விநியோகம் குறித்து பல புகார்கள் வந்துள்ளது. பரிசுத் தொகுப்பில் பொருட்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அரிசி, கோதுமை மாவு, வெல்லம் போன்ற பொருட்கள் தரமற்று இருப்பதாகவும் ரேஷன் அட்டைதாரர்கள் புகாரளித்து வருகின்றனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மாநில அரசுப்பணிகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு – முழு விபரங்கள் இதோ!

இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும் சில பகுதிகளில் நிறுவனங்கள் வழங்கிய பொங்கல் பரிசு பொருட்களில் குறைபாடு இருந்ததாக புகார்கள் வந்ததை அடுத்து, பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் புகார் எழக் காரணமாக இருந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்கவும் கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!