தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு 2022 – தை முதல் நாள் தமிழ் புத்தாண்டா?
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இந்த பொங்கல் பரிசு பையில் தமிழ் புத்தாண்டு என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மற்றும் இலவச வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசுத் தொகை போன்றவைகள் வழங்கப்படும். அதேபோல் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பையும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, உள்ளிட்ட பொருட்களும், கோதுமை மாவு , ரவை, கடலை பருப்பு, புளி உள்ளிட்ட 21 வகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டுமாக முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு விளக்கம்! ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி!
இந்தாண்டு புதிதாக ஆவின் நெய் 100 மிலி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கு அரசு மொத்தம் 1088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பொங்கல் பரிசுத்தொகை குறித்து எந்த அறிவிப்புகள் இடம் பெறவில்லை. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் பொங்கல் பரிசு பை வடிவமைப்பு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் தமிழ் புத்தாண்டு என்ற வாசகம் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
கடந்த திமுக ஆட்சியில் கலைஞர் அவர்கள் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவித்தார். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த போது அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டு சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய திமுக தலைமையிலான அரசு தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கும் முடிவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சமூக ஊடகங்களில் வெளியாகும் பொங்கல் பரிசுப்பை குறித்து அரசு தரப்பில் இருந்து இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.