தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – பொங்கல் பரிசுத்தொகை இல்லை?
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த சுற்றறிக்கையில் ரொக்கப் பணம் என்ற வார்த்தை நீக்கப்பட்டு பரிசு தொகுப்பு என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு:
தமிழகத்தில் மக்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் இலவச வேட்டி, சேலை, கரும்பு போன்ற பொருட்கள் வழங்கப்படும். அதே போல 2022 பொங்கல் பண்டிகை பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய 21 வகை பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2022 முதல் வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை – PF அதிகம் கிடைக்குமா?
இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கு அரசு மொத்தம் 1088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த அதிமுக பொங்கல் பரிசுத் தொகையாக 2000 ரூபாய் அளிக்கப்பட்டது. ஆனால் 2022ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்க பரிசுத்தொகை குறித்த எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு வழங்கப்பட்டது போல பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது வந்தனர். ர். இந்த நிலையில் தற்போது பொங்கல் பரிசு தொகுப்புடன் பரிசுத்தொகை வழங்கப்படுவது குறித்து அரசு ஆலோசித்து விரைவில் ரொக்கப்பணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
தமிழகத்தில் நாளை (டிச.24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் ஜனவரி 3ம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றுஅரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் ரொக்கப் பணம் என்ற வார்த்தை நீக்கப்பட்டு பரிசு தொகுப்பு என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனால் பொங்கல் தொகுப்பில் ரொக்க பணம் கிடையாது என்பது உறுதியாகி உள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.