தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜன.3 முதல் பொங்கல் பரிசு!

0
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - ஜன.3 முதல் பொங்கல் பரிசு!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - ஜன.3 முதல் பொங்கல் பரிசு!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜன.3 முதல் பொங்கல் பரிசு!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக பொங்கல் வைக்க தேவையான பொருட்களுடன் இலவசமாக 21 மளிகை பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டிருந்த நிலையில், இந்த திட்டத்தை ஜனவரி 3ம் தேதி முதல் முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு:

தமிழகத்தில் வழக்கமாக பொங்கல் பாண்டிகையை முன்னிட்டு அரசு குடும்ப அட்டைகளுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், பாசிபருப்பு, கோதுமை, உளுந்து, கடலைபருப்பு, புளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, கரும்பு உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்புடன் முழு கரும்பு ஒன்று வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக இந்த பொருட்கள் கொள்முதல் செய்வது தொடர்பான பல புகார்கள் எழுந்து வந்தது. இவை அனைத்திற்கும் அரசின் துறை அதிகாரிகள் தகுந்த பதில் அளித்தனர். பொங்கல் தொகுப்பானது அரசின் 1 கோடியே 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிச.27 இல் ரிசல்ட்!

இதற்காக நிதியாக ஓவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.505 மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்குவதற்கு ரூ.159 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் முன்னதாக ஆணை வெளியிட்டுள்ளார். இந்த பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாக, பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் அரசின் சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழக முதல்வர் ஜனவரி 3ம் தேதி இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் கடனை பெறுவது எப்படி? சுயதொழில் தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு!

அதன் பிறகு, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் திட்டம் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பிருந்து பொருட்கள் மக்களுக்கு கிடைக்கும் வகையில் அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு கடையிலும், தினசரி 200 பேர் வீதம் கூட்ட நெரிசல் இல்லாமல் பொருட்கள் வழங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு விதிமுறைகளையும், சமூக விலகலையும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொருட்கள் அனைத்தும் நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!