தமிழகத்தில் அனைத்து ரேஷன் காரர்களுக்கும் ரூ.1000 பரிசு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!

0
தமிழகத்தில் அனைத்து ரேஷன் காரர்களுக்கும் ரூ.1000 பரிசு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் காரர்களுக்கும் ரூ.1000 பரிசு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் காரர்களுக்கும் ரூ.1000 பரிசு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வர இருக்கும் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

பொங்கல் பரிசு

தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் கடந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

இதில் சில பொருட்கள் தரமற்றதாகவும் எடை குறைவாகவும் இருப்பதாக ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டது. அத்துடன் தகுதியான நபர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என கைரேகை பதிவு முறை மூலமாக வழங்கப்பட்டது. அதன் காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இது போன்ற பல வகையான சிக்கல்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் இருப்பதால் 2023ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கமாக பணம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மதுரை மாவட்ட பெண்களுக்கு நல்ல சான்ஸ்.. நவ.15 வேலைவாய்ப்பு முகாம் – மாதம் ரூ.15,000 சம்பளம்!

Exams Daily Mobile App Download

மேலும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த 1000 ரூபாயானது ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பேருதவியாக இருக்கும். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!