தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு – நாளை முதல் துவக்கம்!
இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு இருந்தது போல வழக்கமாக ரயில்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு:
தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை தொடர்ந்து 3 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மாநிலத்தில் அனைத்து அரசு, தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறை தினத்தில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட விருப்பப்படுவர். அதே போல வெளியூர்களில் தங்கி பணிபுரியும் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர்.
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – செப்.15 வரை சேவைகள் ரத்து!
இந்த நாட்களில் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். அதனால் ஓரிரு மாதங்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்து விடுவார்கள். தற்போது அடுத்த மாதம் வரவுள்ள தீபாவளி பண்டிகையை ரயில் டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்க உள்ளது. சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிக அளவில் பயணம் செய்வார்கள்.
இவர்களின் வசதியை கருத்தில் கொண்டு 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் IRCTC ன் இணையதளம் வாயிலாகவும் 2022 ஜனவரி 10ம் தேதி வரை பயணிக்க விரும்புபவர்கள் நாளை முதல் முன்பதிவு செய்யலாம். அதே போல 12-ந் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் 14ம் தேதியும், 14ம் தேதி பயணிக்க விரும்புபவர்கள் 15ம் தேதியும் காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்