தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தல்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பில் உள்ள பொருட்கள் தரம் குறைந்து குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதை அடுத்து ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் தொடங்கிய இந்த திட்டம் இன்று அனைத்து பகுதியிலும் உள்ள ரேஷன் கடைகளிலும் தொடங்கியது. பொதுமக்கள் தங்களின் டோக்கன் மற்றும் ரேஷன் அட்டைகளை காண்பித்து பொருட்களை வாங்கி சென்றனர்.
தமிழகத்தில் என்எல்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க பிப்.11 தேதி கடைசி நாள்!
இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதலிலும், விநியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக பல புகார்கள் எழுந்து வருகிறது. அதாவது சில ரேஷன் கடைகளில் 21 வகை பொருட்களுக்கு பதிலாக 18 வகை பொருட்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும், மஞ்சள் பை வழங்கப்படவில்லை. மேலும் வழங்கப்பட்ட அரிசி மற்றும் வெல்லம் தரமான நிலையில் இல்லை என்று அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்கள் தரம் குறைந்து குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலம் முழுவதும் வார இறுதி, இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம்? முதல்வர் அறிவிப்பு!
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்களை சாப்பிட்ட சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தரம் மற்றும் எடை குறித்து புகார் வந்த பிறகு ஒப்பந்ததாரர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது? இன்னும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது குறித்த வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.