தமிழக அரசின் பொங்கல் பண்டிகை இலவச வேஷ்டி, சேலை – ரூ.157.38 கோடி ஒதுக்கீடு!
தமிழகத்தில் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படும். இந்நிலையில் இந்த திட்டத்திற்கு முதல் தவணையாக ரூ.157.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும். மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் வைக்க தேவையான அரிசி, பருப்பு, சீனி, முந்திரி, ஏலக்காய், கரும்பு போன்றவை இலவசமாக வழங்கப்படும். மேலும் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
6 முதல் 8ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறப்பு – மாநில அரசு நடவடிக்கை!
அதுமட்டுமில்லாமல், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடுத்து மக்களின் வாழ்வாதார தொழிலாக நெசவுத்தொழில் முதன்மை பெற்று விளங்குகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளித்து அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாக்குவதற்காகவும், அப்போதைய முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் 1983 ஆம் ஆண்டு இந்த வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இலவச வேஷ்டி, சேலை திட்டத்திற்காக முதல் தவணையாக ரூ.157.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேட்டி, சேலை திட்டத்துக்கு பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கைத்தறி, துணிநூல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களின் விருப்பத்திற்கேற்ப சேலைகளின் வடிவமைப்பு, வண்ணங்களில் மாற்றம் மற்றும் தரமான சேலைகளை வழங்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.