புத்தகத்தை பார்த்து செமஸ்டர் தேர்வுகளை எழுத அனுமதி ! – பல்கலைக்கழகம் அதிரடி !!
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து விடையளிக்கலாம் என புதுச்சேரி பல்கலைக்கழகம் ஒரு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அனைவர் மத்தியிலும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இறுதியாண்டு தேர்வுகள் :
கொரோனா தொற்று காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 21 முதல் தேர்வுகள் நடைபெற உள்ளது.
இந்த தேர்வுகளை ஆன்லைன், ஆப்லைன் மூலம் எழுத அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
புத்தகத்தை பார்த்து தேர்வுகளை எழுத அனுமதி
தற்போது பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது., அதில் றுதியாண்டு தேர்வில் இணைப்பு கல்லூரிகளுக்கு தேர்வறையில் புத்தகம் மற்றும் குறிப்பேடு அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து ஆன்லைனில் தேர்வு எழுதும் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வுகளை எழுத வாய்ப்புள்ளது.
ஆனால் கல்லூரிக்கு சென்று ஆன்லைன், ஆப்லைன் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. இதனால் கல்லூரியில் தேர்வு எழுதும் மாணவர்களும் பாடபுத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளை பார்த்து எழுதலாம் என பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
இணைப்பு கல்லூரியில் படிக்கும் 10 ஆயிரம் மாணவர்கள் தேர்வுகள் எழுத உள்ளனர். ஆனால் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் அனுமதிப்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்