பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.55,000/-
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Research Scientist பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது Research Scientist பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டும் நிரப்ப இருப்பதாக பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதித்த கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் / கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master degree அல்லது Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Sustainable Technology Development அல்லது Environmental Management துறையில் ஆராய்ச்சி செய்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
- பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு தேர்வாகும் நபர்கள் பணியின் போது மாதம் ரூ.55,000/- ஊதியம் பெறுவார்கள். மேலும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
- பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் நேரடியாக 12.07.2022 அன்று நடைபெறும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 11.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.