புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான புதிய வழிமுறை- புதுசேரி அரசு அறிவிப்பு!!
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கிய நிலையில் தற்போது புது அறிவிப்பு ஒன்றை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி புத்தாண்டு கொண்டாட கடற்கரைகளில் மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ரிசார்ட் மற்றும் உயர்தர உணவகங்களில் மக்கள் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்:
நாளை மறுநாள் புத்தாண்டு பிறக்கவிருக்கும் நிலையில் அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்த நிலையில் புதுச்சேரி அரசு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநில் துணை நிலை ஆளுநர் கிரென் பேடி அறிவிப்பு வெளியிட்டார்.
கல்லூரி மாணவர்கள் பழைய பயண அட்டையை கொண்டு இலவசமாக பயணிக்கலாம் – எம்டிசி அறிவிப்பு!!
இந்நிலையில் தற்போது புத்தாண்டு பண்டிகைக்கான புதிய விதிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடற்கரை, ரிசார்ட் மற்றும் உயர்தர உணவகங்களில் மக்கள் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கிய நிலையில் தற்போது புதுச்சேரி கடற்கரையில் மட்டுமே புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பை புதுச்சேரி ஆட்சியர் பூர்வா மற்றும் காவல்துறை இயக்குனர் பாலாஜி ஸ்ரீவத்சவா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதிய வயது அதிகரிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட எந்தவித தடையும் இல்லை. ஆனால் ரிசார்ட் மற்றும் உயர்தர உணவகங்களில் மக்கள் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த விதியை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் நாளை பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் காலை 9 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |