தமிழகத்தில் 9, 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!

0
தமிழகத்தில் 9, 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் 9, 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் 9, 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் 9 ,10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட தொழிற்கல்வி பாடத்திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி 11, 12ஆம் வகுப்புகளில் மட்டுமே தொழிற்கல்வி பாடத்திட்டம் இடம் பெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொழிற்கல்வி:

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பாடத்தை நடத்துவதற்காக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மத்திய அரசின் சமக்ர சிக்‌ஷா நிதியுதவி பெற்று இத்திட்டம் நடைமுறையில் இருந்தது. முதல் கட்டமாக சுமார் 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.3.55 கோடியில் தொழிற்கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொழிற் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் Tailoring, Beautician, Fashion Designing, Agricultural Engineering, General Mechanism உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வந்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜூலையில் மீண்டும் அகவிலைப்படி (DA) அதிகரிப்பு? முழு விவரம் இதோ!

ஆனாலும் 9ம் வகுப்பில் தொழிற்கல்வி விருப்ப பாடமாக இருந்து வந்தது. இந்த பாடத்திட்டம் நன்மை அளிக்கக்கூடியது மாணவர்களின் எதிர்கால வாழ்விற்கு உதவும் என்று கூறப்பட்டு வந்தாலும் எதிர்ப்புகளும் கிளப்பியது. புதிய கல்விக்கொள்கையை ஒத்திருப்பதாக கருதப்பட்டது. அதனால் தொழிற்கல்வி பாடதிட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இந்த நிலையில் 2022 – 2023ம் கல்வியாண்டில் 9 ,10ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனால் தொழிற்கல்வி பாடத்திற்காக பணியமர்த்தப்பட்ட 200க்கும் மேலான தற்காலிக ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வரும் கல்வியாண்டில் 11, 12 ஆம் வகுப்புகளில் மட்டுமே தொழிற்கல்வி பாடத்திட்டம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பயின்று சுயமாக தொழில் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த மாணவர்களுக்கு தற்போது வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 9,10 ம் வகுப்புகளுக்கு தொழிற்கல்வி ரத்து செய்யப்படுவதால் மத்திய அரசிடம் இனி நிதி பெற முடியாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!