ஏப்.,1ம் தேதி முதல் தயார் நிலையில் வாக்குச் சாவடிகள் – பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவிப்பு!!
தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் அமைய உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் 2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று நடக்க இருக்கிறது. தேர்தலுக்கான அனைத்து தரப்பு முன்னேற்பாடு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்த வழிமுறைகளை அனைத்து தேர்தல் பணியாளர்களுக்கும் அறிவித்து உள்ளது.
6-12ம் வகுப்பு இடைநிற்றல் மாணவர்களின் விவரங்கள் – பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை!!
தேர்தல் பணியாளர்கள்:
வழக்கமாக தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முன்னாள் அரசு மற்றும் எல்லைப்படை வீரர்கள் போன்றவர்கள் வாக்குச்சாவடி பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். நடப்பு ஆண்டு தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள பணியாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் சேகரித்து விட்டது. மாவட்ட வாரியாக தேர்தல் பணிகள் குறித்த பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கபடுகிறது.
வாக்குச்சாவடி:
தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு துறை வளாகங்கள் பயன்படுத்தப்படும். தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக தேர்தல் பணிக்கான முன்னேற்பாடுகள் வாக்குச்சாவடிகளில் நடைபெறும். பள்ளிகளில் மாணவர்களுக்கான வகுப்புகள் நடந்து வருகிறது. அதனால் வரும் ஏப்ரல் 1ம் தேதிக்குள் பள்ளிகளில் கற்றல் பணிகளை முடித்து தேர்தல் ஆணையத்தின் வசம் பள்ளிகளை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்