தமிழகத்தில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை – கனமழை எதிரொலி!

0
தமிழகத்தில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை - கனமழை எதிரொலி!
தமிழகத்தில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை – கனமழை எதிரொலி!

தமிழகத்தில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் காவல்துறை முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை எச்சரிக்கை:

இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் கர்நாடக, கேரளா, மஹாராட்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அம்மாநில மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்படுகின்றனர். குறிப்பாக மும்பையில் சயான், பாந்த்ரா, கிங்சர்க்கிள், மாட்டுங்கா, குர்லா போன்ற பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் அப்பகுதி வெள்ள காடாய் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நாளை வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

PF பணத்துக்கு விதிக்கப்படும் வரி விகிதத்தை தெரிந்துகொள்வது எப்படி? முழு விவரங்களுடன்!

மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கனமழை தீவிரமாக பெய்து வருவதால் இந்திய வானிலை மையம் அம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 12 முதல் 20 செ.மீ. அளவு மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. லத்த காற்றுடன் மழை பெய்வதால் வீடுகளை விட்டு தேவையின்றி மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!