குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கு ஆப்பு வைத்த காவல் துறை – வாகனங்கள் இனி ஏலம்!
தமிழகத்தில் போக்குவரத்து காவல் காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் விதிக்கப்படும் அபராத தொகையை குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்த உத்தரவு விடப்பட்டுள்ளது.
காவல்துறை நடவடிக்கை:
தமிழகத்தில் வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த ஆய்வுகள் சமீபத்தில் எடுக்கப்பட்டது. அதில், கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டின் குறிப்பிட்ட மாதங்களில் வாகன விபத்துகள் அதிகம் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் தீவிரமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
Exams Daily Mobile App Download
காரில் அமர்ந்து செல்பவர்கள் அனைவரும் சீட் பெல்டினை முறையாக அணிய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளுடன், குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு, குடித்து விட்டு போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் அவர்களின் அபராத தொகையை நீதிமன்ற வாரண்ட் கொடுத்த 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று காவல்துறை தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! மாவட்ட ஆட்சியர் தகவல்!
Follow our Instagram for more Latest Updates
அவ்வாறு 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தாதவர்களின் வாகனங்கள் காவல்துறை மூலம் பறிமுதல் செய்யப்படும் என்றும், அதன்பிறகு அந்த வாகனங்கள் ஏலத்தில் விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், முதல்கட்டமாக ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை குடித்து விட்டு வாகனம் ஓட்டிய 50 நபர்களின் வாகனங்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.