தமிழக மகளிர் கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு – உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அறிவுரை!
அண்மையில் மதுரை மகளிர் கல்லூரியில் மாணவிகளிடம் சில இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டனர். இந்த காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார்.
மகளிர் கல்லூரி:
தமிழகத்தில் கடந்த வாரம் மதுரை மாவட்ட அரசு மீனாட்சி கல்லூரியில் மாணவிகளிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த சில இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டனர். மேலும் மாணவிகளை அச்சுறுத்தும் வகையிலான செயல்களை செய்தனர். இந்த சம்பவம் சக மாணவர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Follow our Instagram for more Latest Updates
இந்த காட்சி பதிவான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதற்கு பெண்கள் அமைப்பினரும் அரசியல் கட்சியினரூம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிறகு மாவட்ட காவல் துறை இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டது. அப்போது தகராறில் ஈடுபட்ட 10 இளைஞர்கள் கைது செய்பட்டு அவர்களின் இரு சக்கர வாகனகமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மாணவர்களிடம் நடக்கும் நூதன மோசடி.. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை!
Exams Daily Mobile App Download
இதையடுத்து மாணவிகளின் பாதுகாப்பு கருதி மகளிர் காவலர்கள் கல்லூரி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி அனைத்து மகளிர் கல்லூரிகளிலும் மாணவிகளின் பாதுகாப்புக்காக காவலர்களை நிறுத்தலாம் என்று தமிழக அரசுக்கு யோசனை வழங்கியுள்ளார்.