காவலர் உடல் தகுதித்தேர்வினை தவற விட்டோர் கவனத்திற்கு – மீண்டும் வாய்ப்பு!
கொரோனா ஊரடங்கு காரணமாக காவலர் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள தவறியவர்கள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகுதி தேர்வு தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்களுக்கு இன்று திருச்சியில் மீண்டும் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
காவலர் தகுதி தேர்வு:
தமிழகத்தில் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கு 2020 டிசம்பர் மாதம் 13ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் கடந்த ஜூலை 26-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் குளறுபடி இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Biz2Credit நிறுவனத்தில் 150 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு – ஆண்டு இறுதிக்குள் நிரப்ப திட்டம்!
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு மற்றும் தொற்று பாதிப்பு காரணங்களால் தகுதி தேர்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மற்றும் தகுதி தேர்வில் குளறுபடி இருப்பதாக வழக்கு தொடர்ந்தவர்களுக்கும் மீண்டும் மார்பு, உயரம் அளக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் இன்று திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மறு உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. தேர்வில் 146 ஆண்கள், 29 பெண்கள் மற்றும் 1 திருநங்கை உட்பட 183 நபர்கள் கலந்து கொண்டனர். இன்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடந்தது.
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு உத்தரவு!
இவர்களுக்கு நாளை உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போன்ற போட்டிகள் நடக்க உள்ளது. இதில் SC/ST -க்கு அளிக்கப்படும் வயது தளர்வை போன்று திருநங்கைகளுக்கு உயரத்தில் தளர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதற்கான அனுமதியும் பெற்றுள்ளார். யாவரும் இன்றைய போட்டியில் கலந்து கொண்டார். இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் எஸ்சி,எஸ்டி வழங்கப்படும் 157 செ.மீ உயர சலுகை திருநங்கைகளுக்கு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.